கர்நாடக இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கர்நாடகாவில் நடந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Update: 2018-11-06 03:15 GMT
கர்நாடகா,

கர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் கடந்த 3ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதற்காக நடந்த வாக்குப்பதிவில் காலை 7 மணிக்கே கடும் குளிரிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.  நக்சல்கள் அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு பணிக்காக சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மேலும் செய்திகள்