ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

Update: 2018-11-18 03:25 GMT
ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் ஜைனபோரா நகரில் ரெப்பான் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  அவர்களின் அடையாளம் தெரியவரவில்லை.  சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்