ஜம்மு-காஷ்மீர்: குண்டுவெடிப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி

ஜம்மு-காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.

Update: 2018-11-19 17:59 GMT
ஜம்மு, காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்த சோதனைச் சாவடி ஒன்றில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்