காஷ்மீரில் என்கவுண்டர் : ராணுவ வீரர் வீர மரணம், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.