காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கப்ரான் படாகண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.