ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

Update: 2018-11-28 04:40 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. என்கவுண்டரையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்காம் மாவட்டத்தில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்