பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி இன்று விவசாயிகள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணியாக செல்கின்றனர்.

Update: 2018-11-30 01:19 GMT
புதுடெல்லி,

டெல்லியில் விவசாயிகள் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்கின்றனர். 207 விவசாய அமைப்புகள் இணைந்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில், இப்போராட்டம் நடக்கிறது. கடன் நிவாரணம், விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

நேற்று (வியாழக்கிழமை) டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமலீலா மைதானத்துக்கு ஊர்வலமாக விவசாயிகள் சென்றனர்.  இன்று அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள்.நாடாளுமன்ற தெருவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அவர்களிடையே பா.ஜனதா தவிர, இதர கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். விவசாய சங்க  தலைவர்களும் விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசுகின்றனர்.

மேலும் செய்திகள்