அரியானாவில் கெட்ட வார்த்தைகளை பேசிய மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டிய ஆசிரியை

அரியானாவில் ஆசிரியை ஒருவர் கெட்ட வார்த்தைகளை பேசிய 2 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டியுள்ளார்.

Update: 2018-12-09 03:33 GMT
குருகிராம்,

அரியானாவில் பள்ளி கூடம் ஒன்றில் கே.ஜி. மாணவ மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் வகுப்பு எடுத்து கொண்டு இருந்துள்ளார்.  இந்த நிலையில், 2 மாணவர்கள் கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ளனர் என கூறப்படுகிறது.

அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்த ஆசிரியை செல்லோ டேப் கொண்டு 2 மாணவர்களின் வாயில் ஒட்டி உள்ளார்.  இந்த காட்சிகள் பள்ளி கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன.

இதனை தொடர்ந்து உடனடியாக ஆசிரியை பள்ளி கூடத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்