நாடு முழுவதும் 21 சரணாலயங்களை சுற்றிலும் உயிரின பாதுகாப்பு மண்டலம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் 21 தேசிய வன விலங்குகள் சரணாலயத்தை சுற்றி உள்ள 10 கி.மீ. பகுதியை உயிரின பாதுகாப்பு மண்டலமாக விரைவில் அறிவிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

Update: 2018-12-11 23:46 GMT

புதுடெல்லி, 

நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு இதுதொடர்பான வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த மண்டலத்தில், சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் செயல்படக்கூடாது என்று உத்தரவிடலாம் என்றும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்