3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்

3 நாட்கள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு அதிபர் முகம்மது சோலி இன்று இந்தியா வருகை தருகிறார்.

Update: 2018-12-16 01:15 GMT
புதுடெல்லி,

மாலத்தீவு அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட  முகம்மது சோலி, மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது,  இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியை நாளை (திங்கள் கிழமை) சந்தித்து பேசுகிறார்.  பின்னர் அதே நாளில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தையும்  சந்தித்து மாலத்தீவு அதிபர் பேச உள்ளார்.

இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சோலி சந்தித்து பேச இருக்கிறார். செவ்வாய்க்கிழமை, தனது மனைவி பஸ்னா அகமதுவுடன் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்கும் முகம்மது சோலி, அன்றைய தினமே, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.

மேலும் செய்திகள்