விமான பயணிக்கு நடுவானில் உடல் நல குறைவு; மருத்துவமனையில் மரணம்

பெங்களூரு வந்த விமான பயணி ஒருவர் நடுவானில் உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.

Update: 2018-12-22 13:08 GMT
புவனேஸ்வர்,

மேற்கு வங்காளத்தின் மால்டா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32).  இவர் சிகிச்சை பெறுவதற்காக அங்கிருந்து பெங்களூரு நகருக்கு தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்று உள்ளார்.  விமானம் புறப்பட்டு 45 நிமிடங்கள் கழிந்த நிலையில், நடுவானில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து புவனேஸ்வரில் விமானம் தரையிறங்கியது.  அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்தனர்.  அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டார் என அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

மேலும் செய்திகள்