காட்மாண்டு,
நேபாளத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. கிழக்கே நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நேபாளத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. கிழக்கே நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.