உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுவை பயன்படுத்தும் விவசாயிகள்

உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மதுவை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-24 11:47 GMT
உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மதுபானம் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்ஷர் விவசாயிகள்தான் இவ்வாறு செய்துள்ளனர். 

இதுகுறித்து தாவரவியல் உற்பத்தி அதிகாரி ஒருவர் கூறும்போது,  மதுபானத்தை தாவரங்களுக்கு மருந்தாக பயன்படுத்தினால் உற்பத்தி அதிகரிக்கும் என்று அறிவியல்பூர்வமான காரணங்கள் இதுவரை இல்லை. ஆனால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு செய்திருக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. அவர்களை சரியான மருந்துகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்  என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்