மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்-குமாரசாமி

மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம் என பிரதமரிடம் வலியுறுத்தினேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.

Update: 2018-12-27 12:28 GMT
புதுடெல்லி,

கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.  மேகதாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து  பிரதமரை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம்; தமிழகம், கர்நாடக அரசுகள் பேசி தீர்வு காண்பது பற்றி பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது திட்டம் இரு அரசுகள், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்