முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது என பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Update: 2018-12-29 09:28 GMT
காஜிபூர்,

பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள காஜிபூர் நகரில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று கலந்து கொண்டார்.  இதனை தொடர்ந்து மகாராஜா சுஹேல்தேவ் நினைவாக அஞ்சல் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

இதன்பின் நடந்த பொது கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கட்சிகளின் சார்பில் குறைந்த அளவிலான கடன்களே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது என அவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு பின் வாரணாசியில் நடைபெற உள்ள கூட்டம் ஒன்றிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார்.

மேலும் செய்திகள்