மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி

மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-01-15 14:56 GMT
மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இதில் படகில் பயணித்த 6 பேர் ஆற்றுக்குள் மூழ்கி பலியாகி உள்ளனர்.

இந்த படகில் அளவுக்கு அதிக பயணிகள் ஏற்றப்பட்டனரா? அல்லது ஆற்றில் வெள்ளம் எதுவும் ஏற்பட்டு படகு கவிழ்ந்ததா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்