பிரியங்கா நியமனத்தால் எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது -பா.ஜனதா

பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது.

Update: 2019-01-23 13:37 GMT
லக்னோ,

உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் அறிவித்ததை பா.ஜனதா விமர்சனம் செய்து வருகிறது. உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டே பேசுகையில், 2019 தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கிறது. ஆனால், பா.ஜனதாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எப்போதுமே மக்களுடைய பலம் உள்ளது. இப்போது சோனியா காந்தி அரசியலில் பிரியங்காவையும் இணைத்துள்ளார். இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை. பிரியங்காவின் அரசியல் வருகையால் பா.ஜனதாவிற்கு ஒரு சதவீத சவால்கூட கிடையாது என கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மக்களுடனான அனைத்து தொடர்பையும் இழந்துவிட்டது எனவும் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்