உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: மனைவி, 3 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை

உத்தரபிரதேசத்தில் மனைவி, 3 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-02-03 20:28 GMT
கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குப்தா. வியாபாரியான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று தனது மனைவிக்கும், மகன் மற்றும் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்தார். இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர், ரமேஷ் குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்