இந்திய விமானப்படை விமான விபத்துகளை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

கடந்த 1–ந் தேதி, இந்திய விமானப்படையின் மிராஜ்–2000 என்ற பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி, 2 விமானிகளும் பலியானார்கள்.

Update: 2019-02-06 23:00 GMT

புதுடெல்லி,

விமானப்படை விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘மிராஜ்’ விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும் செய்திகள்