சத்தீஷ்கர்: என்கவுண்டரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 10 நக்சல்கள் பலியாகினர்.

Update: 2019-02-07 08:11 GMT
ராய்பூர், 

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர்-நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இதில், 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்