கள்ளக்காதலை கண்டித்ததால் தங்கையை கொன்ற அக்காள்
கள்ளக்காதலை கண்டித்ததால் தங்கையை கொன்ற அக்காள்
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் காபூர்கார் கிராமத்தில் தனது வீட்டின் அருகே 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் அக்காள் காஜல் 2 பேருடன் தகாத உறவு வைத்திருந்ததும், இதை சிறுமி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது அக்காள், தனது 2 காதலர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காஜலை கைது செய்த போலீசார், அவரது 2 காதலர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.