ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

Update: 2019-02-13 18:30 GMT
அமராவதி,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 1–ந் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஆந்திர அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் என ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்