மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இன்று மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்

மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இன்று மீண்டும் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2019-02-15 02:46 GMT
புதுடெல்லி,

மருத்துவ சிகிச்சைக்காக  அருண் ஜெட்லி வெளிநாடு சென்றதால், அவர் வகித்து வந்த நிதி இலாகா அவரது அமைச்சரவை சகாவான பியூஸ் கோயலுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இடைக்கால பட்ஜெட்டை பியூஸ் கோயல் தான் தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், சிகிச்சை முடிவு பெற்றதை தொடர்ந்து அருண் ஜெட்லி நாடு திரும்பினார். இன்று, அருண் ஜெட்லி நிதி அமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்று நடைபெறும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்திலும் அருண் ஜெட்லி கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாக உள்ளன. 

மேலும் செய்திகள்