கொள்ளை போன ரூ.10 லட்சம் பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன்; சட்டசபையில் எம்.எல்.ஏ. கண்ணீர்

கொள்ளை போன ரூ.10 லட்சம் பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என சட்டசபையில் எம்.எல்.ஏ. கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-18 12:58 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் அசம்கார் நகரில் மேகநகர் தொகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. கல்பநாத் பஸ்வான்.  இவர் சட்டசபையில் இன்று பேசும்பொழுது, அசம்காரில் ஓட்டல் ஒன்றில் இருந்தபொழுது எனது ரூ.10 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

நான் மிக ஏழ்மையானவன்.  இந்த சபையில் கைகூப்பி வேண்டி கேட்டு கொள்கிறேன்.  இங்கு எனக்கு நீதி கிடைக்கவில்லை எனில் வேறு எங்கு நான் செல்வேன்.  எனது பணம் திரும்ப கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.  இதில் எப்.ஐ.ஆர். எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா, இதுபற்றி அறிக்கை பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்படும் என கூறினார்.  எப்.ஐ.ஆர். பதிவு செய்ய அவர் விரும்பினால் அது பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்