கெஜ்ரிவால் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2019-02-26 18:30 GMT
புதுடெல்லி,

டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்தநிலையில் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா, பாகிஸ்தானின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்