மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 256 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 256 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

Update: 2019-02-27 04:56 GMT
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 256.18 புள்ளிகள் உயர்ந்து 36,226.89 புள்ளிகளாக உள்ளது.

இதில் தானியங்கி, உலோகம், வங்கிகள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் 1.32 சதவீதம் வரையிலான லாபத்துடன் வர்த்தகம் நடந்தது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 70.80 புள்ளிகள் உயர்வடைந்து 10,906.10 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வியட்நாமில் 2வது சந்திப்பு நடைபெற உள்ளது.  இந்த நிலையில் ஆசிய பங்கு சந்தைகளும் லாபத்துடன் காணப்பட்டன.

மேலும் செய்திகள்