ராஜஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிகார்,
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்களும் பீதி அடைந்தனர். சில இடங்களில் மக்கள் தெருக்களில் கூடியதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.