எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா தக்க பதிலடி
ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுபாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்து மீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்டார் ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.