புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளி கைது
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் முத்தாசிர். சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் அவன் கொல்லப்பட்டான்.
புதுடெல்லி,
முத்தாசிருடைய நெருங்கிய கூட்டாளியான சஜ்ஜத் கான் (வயது 27) நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டான். புலவாமாவை சேர்ந்த இவன், ஜெய்ஷ் இ முகமது இயக்க உறுப்பினர் ஆவான்.
டெல்லியில் ஒரு ஆதரவு கும்பலை உருவாக்கும் வேலையை இவனிடம் முத்தாசிர் ஒப்படைத்து இருந்தான். இத்தகவலை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வா தெரிவித்தார்.