ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் பராமுல்லா பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-03-30 15:29 GMT
பாரமுல்லா,

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள், அர்ஜூமந்த் ஹூசைன் பட் என்ற உள்ளூர் நபரை சுட்டுக்கொன்றனர். பொதுமக்களில் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

முன்னதாக,  அனந்த்நாக் மாவட்டத்தில், தனிக்வா கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. தற்போது வரை இந்த துப்பாக்கிச்சண்டையில், எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பயங்கரவாதிகள் அப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையத்தை பாதுகாப்பு படையினர் ஏற்படுத்தியுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்