கேரளாவில் கல்லூரி மாணவி உயிருடன் தீ வைத்து எரித்து கொலை

கேரளாவில் கல்லூரி மாணவி அவரை பின்தொடர்ந்து சென்ற நபரால் இன்று உயிருடன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

Update: 2019-04-04 09:34 GMT
திரிசூர்,

கேரளாவின் திரிசூர் நகரில் 22 வயது இளம்பெண் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.  பொறியியல் கல்லூரி மாணவியான இவர் தனது வீட்டில் இருந்தபொழுது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.  இதனால் அவரது உறவினர்கள் மற்றும் அருகில் வசித்தவர்கள் உடனடியாக என்னவென்று ஓடி சென்று அவரது வீட்டுக்குள் கவனித்துள்ளனர்.  அங்கு வீட்டின் குளியலறையில் அவர் தீக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.  நீதிஷ் (வயது 32) என்பவர் மாணவி கல்லூரிக்கு செல்லும்பொழுது பின்தொடர்ந்து சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.  இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  அந்நபர் பின்வாசல் வழியே வீட்டிற்குள் சென்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்று உள்ளூர் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் திருவல்லா நகரில் கல்லூரி மாணவி ஒருவர், அவரை காதலித்த நபரால் ஆத்திரத்தில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்