நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
நிகோபார் தீவுகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
புதுடெல்லி,
நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.