மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம்

பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த சித்து பேசியுள்ளார்.

Update: 2019-04-16 13:54 GMT
தேர்தல் பிரசாரத்தின் போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக யோகி ஆதித்யநாத், மாயாவதி, அசாம் கான், மேனகா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

பீகார் மாநிலம் கதிகாரில் பிரசாரம் செய்ய சித்து, நீங்கள் உங்களை சிறுபான்மையினர் என பார்க்காதீர்கள். இங்கு நீங்கள் மெஜாரிட்டியாகவே உள்ளீர்கள். 64 சதவீதத்திற்கு மேல் உள்ளீர்கள். ஓவைசி போன்றவர்களின் பேச்சுக்கு அடிபணியாதீர்கள். அவர்கள் எல்லாம் பா.ஜனதாவால் தூண்டப்பட்டவர்கள் என கூறியுள்ளார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, கண்டிக்கத்தக்க செயல் தொடர்பாக தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் செய்திகள்