புல்வாமாவில் கையெறி குண்டுவீசி தாக்குதல் - ஒரு வீரர் காயம்

புல்வாமாவில் கையெறி குண்டுவீச்சு தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

Update: 2019-04-17 20:51 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்தனர். இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் உள்ள துணை ராணுவ வீரர்கள் முகாம் மீது ஒரு பயங்கரவாதி கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். இதில் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.

மேலும் செய்திகள்