“ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-19 07:09 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருப்பேன். மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது போன்ற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.  தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவித்து விட்டேன்.  ஆனால், சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாகவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். 

 அதேநேரத்தில், நேரடி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்