ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. அது லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.