ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-04-21 02:58 GMT
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது.  அது லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.  34 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்