இலங்கை பயங்கரவாதிகள் வந்து சென்ற தகவல் - பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு

இலங்கை பயங்கரவாதிகள் வந்து சென்ற தகவல் வெளிவந்துள்ளதால், பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-05-04 21:22 GMT
பெங்களூரு,

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பெங்களூருவுக்கு வந்து சென்றதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இதனால் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் போலீசாரின் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதோடு, பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்