காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 பயங்கரவாதிகள் பலி; வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தலிபோரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்து உள்ளார். அதிரடி வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.