தனது தாயிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டில் தாயிடம் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
காந்திநகர்,
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹூராபென்னிடம் நரேந்திர மோடி காலில் விழுந்து ஆசி பெற்றார்.