ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்
ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டது.
ஸ்ரீ நகர்,
ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டம் கல்லார் சவுக் என்ற இடத்தில் ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், ஐ.இ.டி என சந்தேகிக்கப்படும் அந்த வெடிபொருளை பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.