ஜி.எஸ்.டி. வருவாயை பெருக்க மோடிக்கு 101 யோசனைகள்: பஞ்சாப் முதல்-மந்திரி அளித்தார்

ஜி.எஸ்.டி. வருவாயை பெருக்க மோடிக்கு 101 யோசனைகளை பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அளித்தார்.

Update: 2019-05-31 18:30 GMT
புதுடெல்லி,

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) வருவாயை பெருக்க 101 யோசனைகளை தெரிவித்துள்ளார்.

மத்திய ஜி.எஸ்.டி.யை விட மாநில ஜி.எஸ்.டி. அதிகமாக இருக்க வேண்டும், வணிகர்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒற்றை அடுக்கு கொண்டதாக வரி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்