இந்திய அரசியலமைப்பு பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; ராஜஸ்தான் முதல் மந்திரி பேச்சு

இந்திய அரசியலமைப்பு பற்றி மாணவர்கள் பள்ளி நாட்களில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கூறியுள்ளார்.

Update: 2019-06-01 16:35 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் பில்வாரா நகரில் கூட்டமொன்றில் இன்று பேசும்பொழுது, அரசியலமைப்பின் முக்கியத்துவம் பற்றி பள்ளிக்கூட பாடபுத்தகங்களின் தொடக்கத்திலேயே இடம் பெற்றிருக்க வேண்டும்.

அதனாலேயே அரசியலமைப்பின் மீது மாணவர்களுக்கு பொறுப்புணர்வு ஏற்படும்.  இந்திய அரசியலமைப்பு பற்றி மாணவர்கள் பள்ளி நாட்களில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.  இந்த கூட்டத்தில் மாநில சட்டமன்ற சபாநாயகர் சி.பி. ஜோஷியும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்