திருப்பதி அருகே சாலை விபத்து; ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-06-07 02:15 GMT
திருப்பதி,

ஆந்திர பிரதேசத்தில் திருப்பதி அருகே குருவராயபள்ளியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.  வழியில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.  இதன்மீது கார் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்கள் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதேபோன்று இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்