மும்பை: போர்க்கப்பலில் திடீர் தீ - ஒருவர் பலி

மும்பையில் போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2019-06-21 18:13 GMT
மும்பை,

மும்பை மாநிலத்தில் உள்ள மஷாகன் என்ற பகுதியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் என்ற போர்க்கப்பல் புதுப்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த பணியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்