காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-06-22 18:20 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அந்த பகுதியில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்