ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு

ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-06-23 13:49 GMT

நாட்டில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தலை வைக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள குழு ஒன்றையும் பிரதமர் மோடி அமைத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தை மிகப்பெரிய சதியென குற்றம் சாட்டியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. “ஒரே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடியை செய்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றிப்பெறுவதுதான் பா.ஜனதாவின் சதிதிட்டமாகும்,” எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பும் மாயாவதி திட்டத்திற்கு எதிரப்பை பதிவு செய்துள்ளார். 

மேலும் செய்திகள்