உத்தரகாண்டில் கார் விபத்தில் மந்திரியின் மகன் பலி

உத்தரகாண்டில் கார் விபத்தில் மந்திரியின் மகன் பலியாகி உள்ளார்.

Update: 2019-06-26 06:16 GMT
பரேலி,

உத்தரகாண்டில் முதன்மை கல்வி மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக அரவிந்த் பாண்டே உள்ளார்.  இவரது மகன் அங்குர் பாண்டே.  கோரக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்றில் சென்றுள்ளார்.  இன்று அதிகாலை 3 மணியளவில் பரீத்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24ல் லாரி ஒன்றின் மீது மோதி இவரது கார் விபத்திற்குள்ளானது.

இதில் அவர் பலியானார்.  அவருடன் காரில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர்.  ஒருவர் காயமடைந்து உள்ளார்.  அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்