சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2019-07-06 07:54 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் தம்தரி மாவட்டத்தின் கல்லாரி மற்றும் மேச்கா ஆகிய கிராமங்களுக்கு இடையே அமைந்த வன பகுதியில் சிறப்பு அதிரடி படையினர் அடங்கிய குழு ஒன்று நக்சல் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட சென்றனர்.

அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை கடுமையான சண்டை நடந்தது.  இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  7 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்