டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2019-07-13 10:33 GMT
புதுடெல்லி,

டெல்லியில் தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் குவிக்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றியது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்