அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.
இடாநகர்,
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.